சனி, மார்ச் 05, 2005

இரண்டாம் முயற்சி

This is too good, man!!! அதாவது, இவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைக்கவேயில்லை. This is unadultered fun :)

கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கவலை, கொஞ்சம் மகிழ்வு..... போதும், வைரமுத்து கோபிக்கப்போகிறார் :) என்ன சொல்கிறேனென்றால், என் இத்தகைய உணர்வுகளுக்கு விளக்கமேயில்லை. இப்பொழுதய மூளையின் ரசாயன நிலமை காரணமாயிருக்கலாம், ஒருவேளை. மனம், குரல், எண்ணங்கள்... இவை அனைத்தும் இறக்கைகள் கொண்டு பறப்பது போல் ஒரு feeling. ('voice on wings', isn't off the mark, you see........) வெப்பம் தரும் வேதனைக்கு இடையில் ஒரு குற்றால அருவியில் குளியல் போல, ஒரு சுமைதாங்கி பெறும் சிறிது நேர இளைப்பாறல் போல, இன்று தமிழில் பதிவு செய்யும் வாய்ப்பும் ஒரு சுகமே :)

கொஞ்சம் எழுத்து நடை பயின்றபின் சிறிது ஆழமாக எழுத விரும்புகிறேன். இன்றைய பதிவு இத்துடன் முடிவு பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்...... (முடிந்தால் இன்றே எழுதுவேன்....... பார்க்கலாம்)

கருத்துகள் இல்லை: