புதன், நவம்பர் 14, 2007

பிழைப்பு

சில (ஒரு பக்க) விவாதங்களைப் படிக்க நேர்ந்ததன் விளைவுதான் இந்த இடுகை. பிரஞ்சுப் புரட்சி நடந்த காலக் கட்டத்தில், மக்கள் உண்பதற்கு ரொட்டியின்றி திண்டாடுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, விவரம் புரியாத அப்பாவியாக இருந்த அந்நாட்டு ராணி 'அப்படியென்றால் அவர்கள் கேக் உண்ணலாமே?' என்று கேட்டாளாம். அதற்கு நிகரான ஒரு வாதம் தமிழ்மண விவாதக் களத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. OMG..... how can people be so insensitive என்பதுதான் அதைப் பார்த்தபின் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்.

விஷயம் இதுதானங்க. தமிழ் படிச்சி வேலை கிடைக்காதவங்க டீக்கடை வச்சி பிழைச்சிக்கலாம்ங்கற அருமையான யோசனையை 'ஓசை' செல்லா சத்தமா முன்மொழிஞ்சிருக்காரு. அதையே பலரும் வழி மொழிஞ்சிருக்காங்க. இப்போதைக்கு அது விவாதமே இல்லாதக் களமாத்தான் இருக்கு. (அங்க நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகல)

டீக்கடை வைக்கிறது அவ்வளவு சுலபமானதா, அதை வெற்றிகரமா நடத்துறதுக்கான திறமை எல்லாருக்கும் இருந்துடுமான்னு அவ்வளவு நிச்சயமா தெரியல. ஒரு டீ எவ்வளவு விலை, அதிலிருந்து எவ்வளவு வருமானம் பாக்க முடியும், ஒரு மதிப்பான தொகையை அந்தத் தொழில்லருந்து பாக்கணும்ன்னா எவ்வளவு டீ ஒரு நாளுக்கு வித்தாகணும், வரப்போற போட்டிகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கறதுக்கு ஆகக்கூடிய செலவுகள், தேவைப்படும் சக்தி எவ்வளவுன்னு ஒரு ஆராய்ச்சிக்கான மேட்டரே அதுல அடங்கியிருக்கு. இல்லன்னா எல்லாரும் டீக்கடை வச்சி வாழ்வாதாரப் பிரச்சனைகள்ன்னா என்னன்னு கேக்கற நிலமைக்கு நாம எப்பவோ போயிருப்போம்.

படிப்புங்கறது பலருக்கு வேண்டா வெறுப்பான ஒரு விஷயம். சிலருக்கு அதுவே தங்கள் கனவுகளை அடையக்கூடிய ஒரு வாய்ப்பு. ஒரு துறையை விரும்பி ஒருத்தன் படிக்கறான்னா அந்தத் துறையில் ஜொலிக்கணும்ங்கிறதுக்காகதாங்க. ஒரு தமிழய்யாவைப் பாத்து தானும் அவரைப் போலவே மதிப்பான ஒரு ஆளா இந்த சமூகத்தில் வளைய வரணும்ன்னு நினைக்கிறான். அந்தக் கனவுக் கோட்டைக்கான வாசல் கதவுதான் அவனோட தமிழ் MA பட்டம். அவனை ஒரு 250 ரூபாய்க்கு வக்கில்லாதவனாதான் இந்த சமூகம் வச்சிருக்குங்கறதுதான் அந்தப் படம் சொல்ற செய்தி. "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்ற கருத்தை மாணவர்களுக்கு ஒரு உதாரணத்தோட விளக்கிட்டு ("எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒன்ன ஒரு போலிஸ்காரன் பொடனியில ஒண்ணு போட்டு இழுத்துக்கிட்டு போனான்னா எவ்வளவு அவமானமாப் போகும்?" etc etc) , அடுத்த காட்சியில் அந்த உதாரணத்தையே மாணவர்களுக்கு எதிரில் (காவல்துறையினரால் அவமானப் பட்டு) வாழ்ந்து காமிக்கிற அவல நிலைமையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு பரிசா தருது. இதைத்தான் படம் விமர்சிக்குதுங்கிறது என்னோட புரிதல். ஒரு டீக்கடை வச்சி எவ்வளவு கப் டீ ஆத்தினாலும் இந்த ரணத்தை அவனால ஆத்த முடியுமா?

மனிதர்களுக்கான அடிப்படையான தேவை எதுன்னா அது மதிப்பு / மரியாதை என்பதுதான் (உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம் ஆகியவை தவிர்த்து). காலகாலமா அத்தகைய மதிப்பு அவனது தனித்துவத்திற்காக கிடைத்து வந்தது - அவனது கல்விக்காக, வலிமைக்காக, வீரத்திற்காக, போர்குணத்திற்காக, கலைத் திறனுக்காக, இப்படி பலவித காரணங்களுக்காக. அண்மைக் காலங்களில் (மேற்கத்தியத் தாக்கத்தால்?) ஒருவனுக்கு மதிப்பு / மரியாதை கிடைப்பது அவனிடம் இருக்கும் செல்வத்தைப் பொறுத்தே, என்றாகி விட்டது. ஆகவே, கவரிமான் குணம் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிய ஆடம்பரமாகி விட்டது. மற்றவர்கள், அவர்கள் அனுபவிக்கும் மிதிபாடுகளிலிருந்து எழுந்து தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு, நடையைக் கட்ட வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்த உண்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியதற்காக அந்தப் பட இயக்குனர் எவ்வித விளக்கங்களும் அளிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. வழங்கப்படும் (மேலோட்டமான) விமர்சனங்கள் குறித்த அவரது எதிர்வினையும் நியாயமாகவே படுகிறது. ஆசியாவின் சிறந்தப் படங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்திற்கு ஒரு வேளை இப்படம் தகுதியில்லாமல் போகலாம். ஆனால் அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியவர் தமிழில் தரமான படங்களை வழங்கிய வெகு சில இயக்குனர்களில் ஒருவர் என்பதால், அவரது கருத்துக்கு நம்மைப் போன்ற 'சொகுசு நாற்காலி விமர்சகர்களை' விட அதிக மதிப்புண்டு.

சனி, நவம்பர் 03, 2007

சில சுட்டிகள், பின்னூட்டங்கள்........

சில நாட்கள் முன்பு வவ்வால் என்ற பதிவருடன் அவரது சேதுசமுத்திரம் பற்றிய இடுகை குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தேன். அதில் நான் இட்ட பின்னூட்டம் ஒன்றின் ஒரு பகுதி:
உங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)

ஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா? மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது?

இது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
இதைத் தொடர்ந்து, Sondham என்பவர் ஆங்கிலத்தில் ஒரு பின்னூட்டத்தை வழங்கியிருந்தார். அது கீழ்வருமாறு:

At 12:48 PM, Sondham said…

Around 30 years ago, Dubai was a desert in the Arabian Gulf. Now, due to the government's effort to create infrastructures, it is a hot spot in the world map. It was possible because of many many mega projects, for that the government poured billions of Dirhams. Now many ships passing Dubai and there is no major Airline that did not touch Dubai. Import and export became a major source of income for the government. World major events being hosted in Dubai and the International Cricket Board shifted from England to Dubai and so on. Dubai became the hub between West and the East. Example of finished and ongoing projects in Dubai: (search in internet by name for details):

Dubai dry dock
Dubai Internet City
Dubai Gold City
Dubai Airport
World Class Hotels (Burj al Arab)
Dubai Media City
Dubai Palm Island
Dubai World Trade Centre
Dubai Knowledge village
Dubai Educationalal city
Dubai Property
Dubai Sports City
Dubai International City
Burj Tower
Mega Malls
dubai Marina Area
Dubai Land
Discovery Gardens
The Palm Jumeirah
Palm Diera
Hydropolis
Dubai Water front
The Lagoons
The Business Bay
Aqua Dubai
Dubai Maritime City
Dubai Techno Park
The Lost City
Dubai Aviation City
Silicon Oasis
Jabel Ali New Airport
Ski Doom at Dubailand
formula one world theme park
The world (300 man mand islan)
Exhibition City
Golf City
Dubai Metro (12.45 Billion Dirhams)
Bridges & tunnel over 2 km sea bay

...
many more

As I knew, most of the finished projects are successful ones and the ongoing too attracting the world to invest.

If the government calculate about 'individual citizen's benefit out of these projects' or 'profit and loss by Dirhams and Fils', before executing them - could it be achieved??

What we are talking is not even one percent of the total cost of the above projects where we are second largest populated country in the world.

அதற்கு வவ்வாலின் விமர்சனமற்ற ஆமோதிப்பு கீழ்வருமாறு:

At 4:49 PM, வவ்வால் said…

சொந்தம் ,
நன்றி!

அருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல?

இப்படி சொர்க்கபுரியாக விவரிக்கப்படும் (மற்றும் நாமும் அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்) துபாய் குறித்து சில தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. சில சுட்டிகள் நிலைமையை புரிய வைக்க உதவலாம்:
சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால், நம் தெற்காசிய நாடுகளிலிருந்து பிழைப்பு தேடிச் சென்ற மலிவுக் கூலி உழைப்பாளிகளின் அவல நிலை மறைந்திருக்கிறது. அவர்களைச் சுரண்டாமல் இந்நாடுகள் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது என்றே கூறலாம்.

நாமும் இந்நாடுகளைப் பின்பற்ற வேண்டும், மாபெரும் திட்டங்களை அதிரடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்ற அடிப்படையில் செயல்படும் நமது வலதுசாரி அரசுகளும், அவற்றின் கொள்கைகளுக்கு சாமரம் வீசும் பதிவர்களும் விரைவில் உண்மை நிலையை உணருவார்கள் என்று நம்புவோம் :)