சனி, டிசம்பர் 22, 2007

தமிழ்மணத்திற்கு தமிழ்மணம் authorityதான்

என்னை / என் பின்னூட்டத்தைக் குறிப்பிட்டு ஒரு இடுகை வெளிவந்துள்ளது. அவ்விடுகையின் கருத்துகளுடன் நான் பெரும்பாலும் உடன்படாத காரணத்தால், என்னைப் பற்றிய குறிப்பிடல்களை (மட்டுமாவது) நீக்கக் கோரி தனிமடல் அனுப்பியிருந்தேன். தான் netizenஆக இருப்பதால் அவ்வாறு குறிப்பிடும் உரிமை தனக்கு உள்ளதென்று விடை கிடைத்தது :) போனால் போகிறதென்று நட்பு காரணமாக என் பெயரை மட்டும் நீக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. நான் வேறொரு இழையில் தெரிவித்த கருத்துகள் out of contextஅக இன்னமும் அவ்விடுகையில் இடம்பெற்றுள்ளன (எனக்கு விருப்பமில்லாத போதிலும்). யோசித்துப் பார்த்ததில் நானும் netizenதானே என்று புலப்பட்டது. ஆகவே, என் பங்குக்கு எனது netizenshipஐப் பயன்படுத்திக் கொள்வதென்று முடிவு செய்திருக்கிறேன்.

அவ்விடுகையின் பின்னூட்ட இழையில் ஒருவர் குறிப்பிட்டது போலவே, பெரிதும் அயர்ச்சியை ஏற்படுத்தியது அவ்விடுகை. பல பிரச்சனைகள் netizenஆக சிந்திப்பதால் வருபவை என்று தோன்றுகிறது. அவ்வாறில்லாமல் வெறும் citizenஆக மட்டுமே யோசித்திருந்தால் பல அடிப்படைத் தெளிவுகள் கிடைத்திருக்கக் கூடும்.

(இந்த நடை போரடிக்குது. இயல்பு நடைக்கு மாறிக்கறேன்)

எழவு, சாப்பிடப் போனாக்கூட உணவு விடுதியின் வாசலில் 'admissions reserved'ன்னு பலகை நம்மளப் பாத்து சிரிக்குது. அதுக்கு அர்த்தம் என்னன்னா, எப்போ வேணா உங்கள கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ள எங்களுக்கு உரிமை இருக்குன்றதுதான். அதைப் புரிஞ்சிக்கிட்டுதான் உள்ள போறோம். கழுத்துப் பிடிச்சி வெளில தள்ளினாலோ, மாவாட்ட சொன்னாலோ அந்த அனுபவத்தை வாங்கிக்கிட்டுதான்
வர்றோம். சாமானியனுக்கும் புரியற இந்த எளிமையான உண்மை netizenகளுக்கு ஏன் புரியறதில்லையோ தெரியல.

என்னதான் netizenship பேசினாலும், இணையமும் நடைமுறை உலகத்தைப் போன்றதுதான். தெருவில் கிடைக்காத எந்த உரிமையும் இங்க மட்டும் கிடைச்சிடாது. எந்த வலைத்தளத்துக்குள்ள போனாலும் அங்க 'admissions reserved' பலகை தொங்கறதா நினைச்சிக்கிட்டு உள்ள போங்க. ஏன்னா, அப்படி தொங்காட்டாலும், உண்மை அதுதான்.

உங்க வீட்டு gateல "No parking in front of this gate - Hanu Reddy Real Estates" அப்படீன்னு ஒருத்தன் பலகையை மாட்டிட்டு போறான். உங்க real estateல வந்து அவன் இப்படி இலவச விளம்பரம் செய்யறது உங்கள உறுத்திச்சுன்னா அதை நீக்கறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. "என்னங்க 'சிறு பத்திரிகை' மனப்பான்மையோட செயல்படறீங்க?" அப்படீன்னு அவன் பதிலுக்கு கேட்டான்னா, அதுக்கு சிரிக்கிறதா அழறதான்னு முடிவு பண்ண வேண்டிய 'அவல' நிலைதான் ஏற்படும்.

சரி, இந்தப் பதிவை எழுதறதுக்கு கூட எனக்கு அயர்ச்சியா இருக்கு. Publish பண்ணிட வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை: