ஞாயிறு, நவம்பர் 06, 2005

கண்ணில் படாத எண்ணைப் பீப்பாய்கள்

"என் வாழ்நாளிலேயே நான் இதுவரை ஒரு எண்ணைப் பீப்பாயைக் கூட கண்ணாலும் பார்த்ததில்லை. அதை விட முக்கியமான வேலைகள் எனக்கு இருந்திருக்கின்றன. அதுசரி, நீ பார்த்திருக்கிறாயா எண்ணைப் பீப்பாய்களை?"

"நானும் பார்த்ததில்லைதான், ஆனால் என் பேரில்தான் ஊழல்க் குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லையே?"

மேற்கண்ட நகைச்சுவையான உரையாடல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கிற்கும் NDTV நிருபர் பர்க்கா தத்திற்கும் இடையே நடந்தது, அண்மையில் ஒளிபரப்பானப் பேட்டியில். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டால் கொதிப்படைந்து போயிருப்பதாக இப்பேட்டியில் நட்வர் சிங் கூறினார். அவரும், அவரது கட்சியான காங்கிரஸ¤ம், ஈராக்கிலிருந்து தலா நான்கு மில்லியன் எண்ணைப் பீப்பாய்களை சதாம் ஹ¤சேன் அரசுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கியதாக ஐ.நா. சபையின் விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான எதிர்வினைதான் மேலேயுள்ளது.

இந்த அறிக்கையைப் பற்றி தேடிய வரையில் கிடைத்த விவரங்கள்:
  • இந்த விசாரணை ஐ.நா.சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுய அதிகாரக் குழுவால் நடத்தப்பட்டது. இதன் தலைவர் திரு.பால் வோல்கர் ஆவார். <In bold letters>இவர் அமெரிக்க Federal Reserveவின் முன்னாள் தலைவராவார்.</In bold letters> :)
  • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பெரும்பாலான அமைப்புகள் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பை எதிர்த்த சக்திகள் / நாடுகளைச் சார்ந்தவை. ஈராக் போருக்கும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கும் வலுவானதொரு எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த புள்ளிகள், நாடுகள் ஆகியன, அதிகமான அளவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இதை வைத்து, போரெதிர்ப்பு இயக்கமே சத்தாம் ஹ¤சேனின் பொருளுதவியால், ஆதரவால்தான் தோன்றியது மற்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் இணையத்தில் அவசர கதியில் நடைபெறுகின்றன.
  • இந்த அறிக்கையில் என் கவனத்தைக் கவர்ந்த வரிகள்: 'The committee emphasizes that the identification of a particular company's contract as having been the subject of an illicit payment does not mean that such company - as opposed to an agent or secondary purchaser with an interest in the transaction - made, authorized or knew about an illicit payment.' அதாவது, இந்தப் பட்டியலில் ஒரு நிறுவனத்தின் பெயர் உள்ளது என்பதாலேயே அது ஊழல் செய்தது என்றோ, ஊழலை அங்கீகரித்தது என்றோ, ஊழலைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தது என்றோ பொருள் கொள்ள முடியாது. இது போன்ற ஒரு disclaimerஐ நான் பார்த்ததில்லை. இவர்களெல்லாம் குற்றம் புரிந்தவர்கள் என்று பட்டியலிட்டு விட்டு, ஆனால் உறுதியாகக் கூறுவதற்கில்லை என்பது போலத்தான் இருக்கிறது.
  • இந்த அறிக்கை முன்வைக்கும் பிரதானக் கருத்து இவ்வரிகளில்: "......Iraq preferred to sell its oil to companies and individuals percieved as 'friendly' to Iraq, and in particular, if they were permanent members of the Security Council in a position to potentially ease the restrictions of sanctions." அதாவது, ஈராக் தனக்கு வேண்டப்பட்டவர்களாகக் கருதியவர்களுக்கே தனது எண்ணையை விற்க முன்வந்தது. இதன்படி, ருஷ்யாவும், ·பிரான்ஸ¤ம் இதில் பெரும் பங்கைப் பெற்றனர் என்கிறது அறிக்கை. இங்கு எனக்கு லாஜிக் புரியவில்லை. இந்த நாடுகளும் இதர நிறுவனங்களும் லஞ்சம் கொடுத்து அதிக விலையில் எண்ணையை வாங்கியிருக்கின்றனர், சலுகை விலையில் அல்ல. அப்படியிருக்க, இந்த எண்ணைப் பரிமாற்றத்திற்கு நன்றிக் கடனாகத்தான் இந்நாடுகள் ஈராக்கிற்கு உலக அரங்கில் ஆதரவு தெரிவித்தன என்று எவ்வாறு முடிவு கட்ட முடியும்? திரையரங்கில் blackஇல் டிக்கட் விற்பவனிடம் நமக்கு என்ன நன்றியுணர்வு இருக்க முடியும்? ஒருவேளை, ஈராக்கில் லஞ்சம் கொடுத்து வாங்கிய எண்ணையை வேறெங்காவது கொள்ளை லாபத்திற்கு விற்க முடிந்திருந்தால், இக்குற்றச்சாட்டில் உண்மையிருக்கக்கூடும். ஆனால், அவ்வாறிருந்ததா என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. உலகச் சந்தையில் எண்ணையின் விலையை வைத்துத்தான் ஈராக்கின் எண்ணையின் விற்பனை விலையை நிர்ணயித்தது ஐ.நா. சபை.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இது ஏதோ அமெரிக்காவுக்குச் சாதகமான, அரசியல் உள்நோக்கங்களோடு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகவே தென்படுகிறது. அமெரிக்காவின் ஈராக் மீதானப் படையெடுப்பை நியாயப்படுத்தும் சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதும் ஒரு குறிக்கோளாக இருக்கலாம்.

இதில் நமது நட்டுவனார் சிங் மாட்டிக் கொண்டிருப்பதுதான் முரண்பாடுகளின் முத்தாய்ப்பு. பதவியில் இல்லாதக் காலத்தில் இவரும் இவரது காங்கிரஸ¤ம் எதற்காக எட்டு மில்லியன் எண்ணைப் பீப்பாய்களை பினாமி பேரில் வாங்கினார்கள், அதுவும் 1 மில்லியன் டாலர்கள் வரை லஞ்சம் கொடுத்து, என்றக் கேள்விக்கான விடை நமக்குத் தெரியாமலே போய்விடக்கூடும். பதவியில் இல்லாத நட்வர் சிங், ஆட்சிப் பொறுப்பில் இல்லாதக் காங்கிரஸ், இவர்களால் சத்தாமிற்கு என்ன ஆதாயம் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஒன்றை இங்குக் கூற வேண்டும். இந்த அறிக்கை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிடுகிறது. ஆனால் இந்த அறிக்கையைப் பற்றி கூகிளில் தேடினால் நம் நட்டுவனார் சிங்கின் பெயர்தான் அதிகமாகத் தென்படுகிறது (இந்திய செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், ஆகியவற்றிலிருந்து). "கிடைச்சாண்டா ஒருத்தன், போடுவோம்டா தர்ம அடி" என்ற நமக்கே உரித்தான மனப்பான்மைக்கு ஈடு இணையே கிடையாதென்றுதான் தோன்றுகிறது. பாவம், எட்டு மில்லியன் பீப்பாய்களில் ஒன்றையாவது அவர் கண்ணில் காட்டியிருக்கலாம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

With little oversight from the U.N., the Iraqi dictatorship was able both to circumvent and to exploit the oil-for-food program. It is suspected of selling its oil at "bargain basement prices" that benefited numerous middlemen while overpaying for various imports, which allowed it to reward suppliers. The program was officially brought to an end in November 2003.[3]
http://www.heritage.org/Research/InternationalOrganizations/wm438.cfm

Voice on Wings சொன்னது…

Hi, you might want to check the 'about' page of the source you have cited: http://www.heritage.org/about/ ("Some of the finest conservative minds..........." etc etc) :)

I have not claimed that Saddam was an angel, and I have reasons to believe he was not. What i'm saying is that the sources listed in the Report (the French, the Russians, the Chinese, along with our own good ol' politicians and dirty big business a.k.a. Reliance) are accused of 'paying' the bribe and not 'taking' it. They had to pay a premium over and above the UN Official Selling Price, to lift the quantities allocated to them. This being the case, why would they nurture a sense of gratitude towards the bribe-taker, and promote his cause in the international arena? That's something that's beyond my comprehension, and hopefully the 'finest conservative minds' would help me with that.

The impression I get is that a sustained effort is on to tarnish the image of Anti-war activists / movement and those who opposed the US invasion and the occupation of Iraq. This report has only served to provide fodder to this effort. Coming from an ex-senior US official, I'm hardly surprised.

பெயரில்லா சொன்னது…

அறிக்கை. இங்கு எனக்கு லாஜிக் புரியவில்லை. இந்த நாடுகளும் இதர நிறுவனங்களும் லஞ்சம் கொடுத்து அதிக விலையில் எண்ணையை வாங்கியிருக்கின்றனர், சலுகை விலையில் அல்ல.
voice on wings, i just gave info since u were wondering why they paid above market prices. they did not.
sadam was restricting from selling oil at all other than for food and medicine. the charge is he sold some oil for money .