வெள்ளி, பிப்ரவரி 20, 2009

போர்

கடைநிலைக் காவல் வீரருக்கும்
கடைநிலை வழக்கறிஞருக்கும்,
அதிகாரக் கைக்கூலியின்
சூழ்ச்சியின் பேரில்.

புலம்புகிறான் கைக்கூலி
தேசிய ஊடகங்களில், தன்
தேசியச் சார்பு நிலைப்பாட்டுக்குத்
தான் தரும் விலையென
(சொல்லாமல் விட்டது - அவனது
மாநில எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து)

ஊடகமும் ஆமோதிக்கிறது,
முட்டை எறிவைக்
கல்லெறிவெனத்
திரித்துக் கூறி.
எம் எழுச்சியை
உலகமே தூற்றட்டுமென.

கடைநிலைச் சமூகம்
குருதி தெறிக்கப் போர் புரிய,
இக்காட்டுமிராண்டித்தனத்தை
இவ்வுலகமே தூற்ற,
கள்ளச் சிரிப்புச் சிரிக்கிறது
பார்ப்பனியம்.
தன் சூழ்ச்சிக்கு
ஈடு இணையே
கிடையாதென...