திங்கள், அக்டோபர் 01, 2007

கனம் கோர்ட்டார் அவர்களே!

தற்போது தமிழகத்தில் பந்த் நடத்தலாமா கூடாதான்னு ஒரு வழக்கு நடந்து அதுக்கு எங்க ஊரு உயர்நீதி மன்றத்தில ஒரு தீர்ப்பும் வழங்கினாங்க (மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாம நடத்தலாம்ன்னு) . இந்த குழப்பவாதத் தீர்ப்பைப் பத்தி நான் எதுவும் சொல்லப் போறதில்லை. சரி, பிரச்சனைக்கு முடிவு கிடச்சிடுச்சின்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, அவசர அவசரமா நீங்க சுப்ரீம் கோர்ட்ல ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி, அந்தத் தீர்ப்பை மாத்திச் சொன்னீங்களாம் -அதாவது, பந்த் நடத்தக்கூடாது, அது சட்ட விரோதமானதுன்னு.

என்னடா நம்ம கோர்ட்டாருங்க இப்படி ஞாயித்திக் கெழமையெல்லாம் வேலை செய்யறாங்களேன்னு அப்படியே புல்லரிச்சி நிக்கும்போது, உங்களப் பத்தின வேற சில தகவல்கள் ஞாபகம் வந்து உறுத்த ஆரம்பிச்சுது. அதாவது, உங்கள மாதிரி கோர்டடு்களோட ஆமை வேக செயல்பாட்டால நம்ம நாட்டுல மூணு லட்சம் பேர் குற்றம் நிருபிக்கப் படாமலேயே சிறையில் வருஷக் கணக்கா வாடிக்கிட்டிருக்காங்க என்பது போன்ற தகவல்கள். நிலம இந்த மாதிரி இருக்கும்போது, இந்த தமிழக பந்த் விவகாரத்தில் மட்டும் ஏன் உங்களோட அதீத ஈடுபாடுன்னு கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க. இப்படி ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி உங்களோட மத சார்பின்மையை காட்டிக்கிட்டது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதாங்க. பொதுமக்கள் நலனில் உங்களுக்கு இருக்கற அக்கறையை நான் மெச்சிக்கறேன்.

இன்னிக்கி காலையில சில செய்திகளை படிச்சேங்க. எங்க கலைஞர் ஐயா இந்தியில பேசினாராம், உண்ணாவிரதம் இருக்காராம். மாநிலம் முழுவதும் பல உழைப்பாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யறதுனால, தமிழகத்தில் கிட்டதட்ட பந்த் சூழ்நிலைதான் நிலவுது, அப்படியிப்படீன்னு கேள்விப்பட்டேங்க. அதாவது, நீங்க ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, கிட்டத்தட்ட செல்லுபடியாகாத மாதிரிதாங்க. வருத்தமான செய்திதான், என்ன பண்ணறது?

இப்பிடி செய்திகள மேஞ்சிக்கிட்டே வரும்போது இது கண்ணுல பட்டுதுங்க - அதாவது இன்னிக்கி நீங்க புடுங்கி மாதிரி ஏதோ பேசியிருக்கீங்களாம் (SC pulls up TN govt என்பதன் தமிழாக்கம் ;-) ) , மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்கணும் அது இதுன்னு. மறுபடியும் சில தகவல்கள் ஞாபகத்துக்கு வந்து உறுத்துதுங்க. அதான், முன்னாடி காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைன்னெல்லாம் வந்தப்போ எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய தண்ணி பத்தி நீங்களும் தீர்ப்பு சொன்னீங்க. அப்போ, சம்மந்தப் பட்ட எதிர் தரப்பு மாநிலங்கள் உங்க தீர்ப்பை நிராகரிச்சி, உங்க ஆணைய செயல்படுத்தாம முரண்டு பிடிச்சாங்க. இப்போ நீங்க தமிழக அரசை குற்றம் சாட்டற அதே contempt of courtதான் அவங்களும் செஞ்சாங்க. இப்போ தமிழக அரசை கலைக்கணும்ன்னு கூக்குரல் விடற நீங்க, அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?