ஞாயிறு, ஜனவரி 20, 2008

ஜல்லி கட்டு கதை

(குறிப்பு - தலைப்பில் வல்லெழுத்து மிகுதல் வேண்டுமென்றே தவற விடப்பட்டுள்ளது. காணாமல் போன 'க்' கை வேண்டிய இடத்தில் நிரப்பிக் கொள்ளவும்)

ஜல்லிக்கட்டுங்கற 'வீர' விளையாட்டு சங்க காலங்களிலிருந்தே நடைபெற்று வருதுன்னு ஒரு குமிழை ஊதி ஊதி பெருசாக்கிக்கிட்டே போகிற இன்றைய நிலையில், அந்தக் குமிழை ஒரு சின்னக் குத்தூசி கொண்டு லேசா குத்தியிருக்காங்க இந்தப் பக்கத்தில்.

ஒரு மிரண்டு ஒடும் வாயில்லா ஜீவனை கூட்டத்தோடு கூட்டமா விரட்டிப் பிடித்துத்தான் நம்ம தொன்மையான தமிழ் மரபைக் கட்டிக்காக்கணும்ங்கிற பரிதாபமான நிலையில் நம்ம தமிழ் மரபும் இல்லைன்னுதான் நினைக்கறேன். புலிகளைக் கொல்வது வீரமா ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தது. இப்பொ project tigerன்னு வந்து அவை அரசாலும் சட்டத்தாலும் பாதுக்காக்கப்படற நிலை இன்னைக்கி நிலவுது. அது மட்டுமில்லாம, SPCA, Blue Cross அப்படீன்னெல்லாம் நாகரீகத்தின் அறிகுறிகள் நம்ம இருண்ட பிரதேசங்களிலயும் தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம எப்படி நடத்தப் படணும்ன்னு எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரி நம்மைச் சார்ந்து வாழும் ஜீவன்களையும் நடத்துவோம். (மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - லூக்கா 6:31)

அடுத்த வருசமாவது இந்த கோரப் பழக்கம் தடை செய்யப்படும்கிற நம்பிக்கையில்........

கருத்துகள் இல்லை: